கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.12.2025

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நீட் தேர்வை மறு பரிசீலனை செய்க; தகுதியை மேம்படுத்தாமல், வணிகமயமாகிவிட்டது என மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களவையில் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்கு பணிச் சுமை… எஸ்.அய்.ஆர் பணிக்கு கூடுதல் ஊழியர் களை நியமிக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தி இந்து:

* மாநில பார் கவுன்சில்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

தி டெலிகிராப்:

* கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக 550 இண்டிகோ விமானங்கள் ரத்து: இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பீகாரில் 5 லட்சம் போலி வாக்காளர்கள்: பீகாரின் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் 5 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்களை நீக்கத் தவறிவிட்டது என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) குற்றச்சாட்டை எதிர்கொள்ள ஆவணங்களைத் தயாராக வைத்திருக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு.

* ஒலிபெருக்கி (லவுட்ஸ்பீக்கர்) பயன்படுத்துவது எந்த மதத்தையும் கடைப்பிடிப்பதற்கான அத்தியாவசிய அம்சம் அல்ல; மேலும், ஒலிபெருக்கியின் ஒலியை அதிகப்படுத்துவது, அதை கேட்க வேண்டாம் என விரும்பும் நபர்களின் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது, உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தீர்ப்பு.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *