இந்நாள் – அந்நாள் திராவிடர் மாணவர் கழகம் (01.12.1943)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சுயமரியாதைக் கொள்கை இளையோர்களையும் சென்றடைய அதன் மூலம் அடித்தட்டு மக்களிடையே சுயமரியாதை விதையை விதைக்க தோன்றியது திராவிடர் மாணவர்கழகம்.

குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனருக்கென்று வைக்கப்பட்ட தண்ணீர் பானையிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர் ஒருவர் தண்ணீர் குடித்துவிட்டார் என்பதற்காக பார்ப்பன வார்டன் ஒரு ரூபாய் அபராதம் போட்டார். அவ்வளவுதான், பிடித்தது நெருப்பு! பற்ற வைத்தவர்கள் தவமணிராசன், கருணானந்தம், செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி) இதன்மூலம் ஓர் இயக்கம் பிறப்பெடுத்து திராவிடர் மாணவர் கழகமாக உருப்பெற்றது.

இதன் முக்கிய நோக்கம், சுயமரியாதை மற்றும் திராவிடக் கொள்கைகளை மாணவர்களிடையே பரப்புவதும், இந்தித் திணிப்பு போன்ற ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதுமே ஆகும்.

1944இல் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக  மாறியபோது, இந்த மாணவர் கழகம் அதன் முக்கியப் பகுதியாக மாறியது.

முதல் மாநாடு: திராவிடர் கழகம் 1944 ஆகஸ்ட் 27இல் சேலத்தில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே, 1944 பிப்ரவரியில் கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழகத்தின் முதல் மாநாடு நடத்தப்பட்டது.

1943 டிசம்பர் 1ஆம் நாள் கும்பகோணத்தில் தொடங்கி, 82 ஆண்டுகள் கடந்து 83ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய தேதியிலும், திராவிடர் மாணவர் கழகம் திராவிடர் இயக்கக் கொள்கைகளை மாணவர்களிடையே எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *