தமிழறிஞர் அண்ணல் தங்கோவுக்கு குடியாத்தத்தில் உருவச் சிலை: தமிழ்நாடு முதலமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பு

1 Min Read

அரசியல்

சென்னை, மே 6-தமிழ்மொழி மீது தீராத பற்றுக் கொண்டு, வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக் கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாக்கிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாக்கிரகம் ஆகிய போராட்டங்களில் கலந்துக் கொண்டு சிறைத் தண்டனை பெற்று மடிந்த தமிழறிஞர் அண்ணல் தங்கோவின் உருவச் சிலை வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று அறிவித் தமைக்காக அண்ணல் தங்கோ குடும்பத்தினர் ஜெ. தமிழ்ச் செல்வன், ஜெ.அருள்செல்வன், கே. கந்தன், டாக்டர் தில்லைவாணன், பி. ஜவகர், இந்துமதி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களை 4.5.2023 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *