மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு ஊக்கமும் வழிகாட்டுதலும் அளித்த சிறப்பு ஆலோசனை நிகழ்ச்சி

1 Min Read

திருச்சி, நவ. 27- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 21.11.2025 அன்று 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் மெல்லக் கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்பு ஆலோசனை மற்றும் பயிற்சி நிகழ்ச்சி  நடைபெற்றது.

மாணவர்களின் கல்வித் திறன்களை உயர்த்தி, படித்ததை நினைவில் நிலைத்திருக்கச் செய்யும் பல்வேறு பயில் திறன் முறைகளை அறி முகப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.

பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா முன் னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியரும், மாணவர் சேர்க்கைப் பிரிவின் உதவி இயக்கு நருமான மேலும் பெரியார் கல்விக் குழுமங்களின் இணை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் டி. கிருஷ்ண குமார் கலந்து கொண்டு ஆழமான விளக்கங்களுடன் கருத்துரையாற்றினார்.

மாணவர்கள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் படிப்பது, நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சிகள், திரும்பத் திரும்பப் பயிற்சி பெறும் பழக்கம், பாடத்தை படிப்பதற்கான நேர மேலாண்மை, தேர்வில் எழுதும் நடை முறை போன்ற பல முக்கிய அம்சங்களை அவர் எளிமையாகவும் நடைமுறைக்கேற்ற வகையிலும் பகிர்ந்து எடுத்துரைத்தார். மேலும், “ஒவ்வொரு மாணவரும் தனித்திறன் கொண்டவர்கள்; சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் எந்த சிரமத்தையும் கடக்க முடியும்” என மாணவர் களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் வழங் கினார்.

இந்நிகழ்ச்சி மாணவர் களின் மனஉறுதியை உயர்த்தியதோடு, தங்களுக் கேற்ற கற்றல் முறை என்ன என்பதை உணர்ந்து செயல்பட உதவும் வழி காட்டுதல்களையும் அளித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *