டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத்தேர்வு முடிவுகள்: அடுத்த மாதம் வெளியாகும் – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

2 Min Read

சென்னை,நவ.8- டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று அமைச்சர் தங்கம் தென்ன ரசு தெரிவித்துள்ளார். குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு கள் தாமதம் என செய்தி வெளி யானது. இந்நிலையில், பத்திரிகைக ளில் வந்த செய்திகளை சுட்டிக் காட்டி அமைச்சர் தங்கம் தென்ன ரசு விளக்கம் அளித்தார். 

அப்போது பேசிய அவர், தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின் றன. தேர்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய அரசுப் பணியாளர் குடிமைப்பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 5 மாதம். ஒன்றிய அரசு தேர்வா ணைய செயல்திறனைவிட மாநில தேர்வாணைய செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியா கும். மதிப்பீட்டு பணிகள் செவ் வனே நடைபெற்று 80 சதவீதத்துக் கும் மேல் நிறைவு பெற்றுள்ளன. 

எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 8,000 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்குவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்ன ரசு, இந்த ஆண்டில் மட்டும் இது வரை 13,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

அண்மையில் முதலமைச்சரால் குரூப் 4 பணியில் தேர்வு பெற்ற 10,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023-2024ஆம் ஆண்டில் மேலும் சுமார் 10,000 பேருக்கு பணி நிய மன ஆணைகள் வழங்கப்படும்.

குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட் டாயத் தமிழ் தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தேர்வு பிப்.25இல் நடைபெற்றது. இப்பணி துவக்கப் பட்ட மார்ச் மாதத்தில் தேர்வா ணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. வேறு சில தேர்வுகளின் எழுத்துத் தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்ததால் சற்றே தாமதமானது. முதலமைச்சர் உத்தர வின் பேரில் சுமார் ரூ.1 கோடி மதிப் பீட்டில் 2ஆவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது. 

எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதமில்லை என்று குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *