இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தகவல்!
சென்னை, நவ. 22 – தமிழ்நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண் டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முதலிடத்தில்
தமிழ்நாடு
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே 31 ஆயிரத்து 517 தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வாகன உற்பத்தி ஆலைகளும், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஜவுளி ஆலைகளும் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில், ஒரு லட்சத்து 97 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்றுமதி மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டம் 32 ஆயிரத்து 422 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், திருப்பூர், 21 ஆயிரத்து 328 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி யில் உள்ளது.
அவற்றின் உற்பத்தியில் ஈடு பட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை உள்நாட்டு சந்தையில் விற்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
