மேரி பூனம் லக்ஸோஸ்: முதல் சர்ஜன் – ஜெனரல் ஆஃப் இந்தியா!

Viduthalai
1 Min Read

அரசியல்

மேரி பூனம்  லக்ஸோஸ்  1881-இல்  கேரளத்தில்  ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில்  பிறந்தவர். 1909 -இல்  சென்னைப்  பல்கலைக்கழகத்தின்  முதல் பெண்  பட்டதாரி என்ற  பெயர் பெற்றார்.

 உள்ளூரில்  மருத்துவக் கல்வி பயில  எதிர்ப்புத் தோன்றியதால்  அவர் இங்கிலாந்து  சென்று டாக்டர் பட்டம்  பெற்றார்.

1924ஆம் ஆண்டு திருவாங்கூர்  ராஜ்ஜியத்தின்  நல்வாழ்வுத்துறை  இயக்குநராகப் பதவி  ஏற்றார்.  

1938 -இல்  இந்திய  அரசில்  “சர்ஜன்  – ஜெனரல் ஆஃப் இந்தியா’ என்ற  பதவியையும் திறம்பட  வகித்து,  தேசிய  மட்டத்தில்  அவ்வுயரிய  பதவியை  எட்டிய முதல்  பெண் டாக்டர்  என்ற  பெருமையையும்  தட்டிச் சென்றார் மேரி  பூனம்.

நாட்டின்  முதல் எக்ஸ்ரே  நிலையமும்  முதல்  ரேடியம்  வார்டும்  அவர் காலத்திய  சாதனைகளாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *