இந்நாள் – அந்நாள் (12.11.1899)

ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் பிறந்தநாள்

தமிழின் வரலாற்றில் “ஆட்சி மொழிக் காவலர்” என்ற சிறப்புப் பெயரால் போற்றப்படும் அறிஞர்
கீ.இராமலிங்கனார் பிறந்தநாள் இன்று.

ஆட்சித் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளின் மேன்மைக்கும் இவர் ஆற்றிய தொண்டில் மகத்தானது, நிர்வாகம் மற்றும் சட்டம் சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்கு இணையாகத் தமிழில் புதியச் சொற்களை உருவாக்கிக் கொடுத்ததாகும். அவர் ஆட்சிமொழியின் பயன் பாட்டுத் தேவையை உணர்ந்து, அச்சொற்களைத் அரசு அலுவல கங்களில் அன்றாடப் புழக்கத்திற்குக் கொண்டுவர அயராது உழைத்தார். இதன் மூலம், தமிழ்நாட்டின் ஆளுமை மொழி தமிழில் இயங்க அடித்தளமிட்ட பெருந்தகையர் ஆனார்.

அவர் தொகுத்தளித்த இரு முக்கிய நூல்கள் ஆட்சித் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின:

ஆட்சித்துறை தமிழ் அரசு நிர்வாகம் மற்றும் மடல் போக்கு வரத்துகளுக்கான செயல்முறைத் தமிழைக் குறித்த இந்நூல், அரசு அலுவலர்களுக்கும் மொழிபெயர்ப் பாளர்களுக்கும் ஒரு வழிகாட்டிப் பெட்டகமாக அமைந்தது.

ஆட்சி மொழி அகராதி ஆங் கிலத்தில் உள்ள அரசாங்கச் சொற் களுக்கு இணையான, துல்லியமான தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்ட இந்த அகராதி, ஆட்சித் தமிழைச் செழுமைப்படுத்தியது. இதன் மூலம், நிர்வாகத் துறையில் தமிழ் மொழியை முழுமையாக நடைமுறைப்படுத்த வழிவகை செய்தார்.

தமிழ்த் திருமண வழிபாட்டு முறை

கீ.இராமலிங்கனார், தமிழ் மொழியின் பயன்பாட்டை அரசுத் துறையுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழர்களின் பண்பாட்டு மற்றும் சமூக வாழ்விலும் அதன் தேவையை வலியுறுத்தினார்.

தமிழில் மட்டுமே திருமணம் நடத்தும் முறையை ஊக்குவிக்கும் வகையில், “தமிழ்த் திருமண முறைக் கெனத் தனியே ஒரு நூலை” அவர் எழுதினார்.

வெறும் நூலை எழுதுவதோடு நின்றுவிடாமல், பலருக்கும் தமிழ்த் திருமண முறையிலேயே திருமணங் களைச் செய்வித்து, தமிழ் மொழியின் மேன்மையை மக்களிடையே கொண்டு சேர்த்தார். தமிழ்வழித் திருமண முறையைச் சடங்குகளின் பிடியில் இருந்து மீட்டு, எளிமையும் தமிழும் நிறைந்த ஒரு பண்பாட்டுக் கொண்டாட்டமாக மாற்றியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

கீ.இராமலிங்கனாரின் தமிழ்ப் பணி வெறும் மொழிபெயர்ப்புடன் நின்றுவிடாமல், பயன்பாடு மற்றும் பண்பாடு எனப் பல தளங்களில் விரிகிறது. நிர்வாகச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் உருவாக்கி, அரசுத் துறையில் தமிழை நிலைநிறுத்தினார். நூல் தொகுப்பு ஆட்சித்துறை தமிழ், ஆட்சி மொழி அகராதி போன்ற அரிய கருவூலங்களைத் தந்தார்.

இவரது அயராத உழைப்பின் விளைவாகவே, இன்று தமிழ் நாட்டில் ஆட்சித்துறைத் தமிழ் செழுமையுடன் செயல்பட முடிந்தது. எனவேதான், அறிஞர் கி. இராமலிங்கனார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுக்காக “ஆட்சி மொழிக் காவலர்” என்று அறிஞர்களால் இன்றும் போற்றப்படுகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *