மோடியின் டிஜிட்டல் இந்தியா இதுதானா? வங்கிக் கணக்கிலிருந்து ரூ.288 கோடி திருட்டு

Viduthalai
1 Min Read

  சென்னை, மே 11- இணைய வழியில் பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டும் கும்பல் தொடர்ந்து  கைவரிசை காட்டிக் கொண்டே இருக்கிறது.  அந்த வகையில் கடந்த ஓராண்டில் நூதன முறையில் பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 288.38  கோடி திருடப்பட்டுள்ளதாக சைபர்  கிரைம் காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி காவல்துறையினர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக  பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. அதன்படி ஓராண்டில் ரூ.288 கோடிக்கும் அதிகமான பணம் பொது மக்களின் வங்கிக்  கணக்கில் இருந்து சுருட்டப்பட்டிருக் கிறது. 

பொது மக்களின் புகாரின் அடிப்படையில் 106 கோடி ரூபாய்  முடக்கப்பட்டுள்ளது. ரூ.27 கோடி  உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் ஆன்லைன் மூலமாக 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. ரூ.67 கோடி ரூபாய் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.6  கோடி பணம் 3 மாதத்தில் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் அலைபேசி சிம்கார்டுகள் தடைசெய்யப்பட்டு வருகின்றன. 

இதன்படி 27 ஆயிரத்து 905 சிம் கார்டுகள் தடைசெய்ய ஒன்றிய  அரசால் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 240 சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. எனவே பொது மக்கள் தேவையில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை  கண்டு கொள்ளாமல் கவனமாக இருக்கவேண்டும். -இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *