மோடியின் டிஜிட்டல் இந்தியா இதுதானா? வங்கிக் கணக்கிலிருந்து ரூ.288 கோடி திருட்டு

1 Min Read

  சென்னை, மே 11- இணைய வழியில் பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டும் கும்பல் தொடர்ந்து  கைவரிசை காட்டிக் கொண்டே இருக்கிறது.  அந்த வகையில் கடந்த ஓராண்டில் நூதன முறையில் பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 288.38  கோடி திருடப்பட்டுள்ளதாக சைபர்  கிரைம் காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி காவல்துறையினர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக  பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. அதன்படி ஓராண்டில் ரூ.288 கோடிக்கும் அதிகமான பணம் பொது மக்களின் வங்கிக்  கணக்கில் இருந்து சுருட்டப்பட்டிருக் கிறது. 

பொது மக்களின் புகாரின் அடிப்படையில் 106 கோடி ரூபாய்  முடக்கப்பட்டுள்ளது. ரூ.27 கோடி  உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் ஆன்லைன் மூலமாக 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. ரூ.67 கோடி ரூபாய் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.6  கோடி பணம் 3 மாதத்தில் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் அலைபேசி சிம்கார்டுகள் தடைசெய்யப்பட்டு வருகின்றன. 

இதன்படி 27 ஆயிரத்து 905 சிம் கார்டுகள் தடைசெய்ய ஒன்றிய  அரசால் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 240 சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. எனவே பொது மக்கள் தேவையில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை  கண்டு கொள்ளாமல் கவனமாக இருக்கவேண்டும். -இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *