இன்று (6.11.2025) சுயமரியாதைச் சுடரொளி மறைந்த செய்யாறு பா.அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு அவரது மகன் செய்யாறு மாவட்டக் கழகத் தலைவர் செய்யாறு அ.இளங்கோவன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சத்தை வழங்கினார். அவர் நன்கொடையை மகிழ்ச்சியுடன் வழங்கிய போது எனது தந்தையார் தனது பிறந்த நாளில், தமிழர் தலைவரைச் சந்தித்துத் தொடர்ந்து இயக்கத்திற்கு நன்கொடையை வழங்கி வந்தார். அதைப் பின்பற்றி, தொடர்ந்து நாங்களும் இயக்கத்திற்குத் தொண்டாற்றுவோம் என்று உறுதி அளித்தார். அவருக்குக் கழக துணைத் தலைவர் பயனாடை அணிவித்தார். பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவருக்கும் அவரது நினைவாக, லுங்கி வழங்கப்பட்டது. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் செய்யாறு மாவட்டத் தலைவர் செய்யாறு அ.இளங்கோவன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், சேத்பட் அ.நாகராசன், செய்யாறு நகர செயலாளர் தி.காமராஜ், செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.வெங்கட்ராமன். கழகப் பொதுச் செயலாளர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இளங்கோவன் அவர்களிடம் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
‘சுயமரியாதைச் சுடரொளி’ செய்யாறு பா.அருணாசலம் நூற்றாண்டு விழா – ‘பெரியார் உலக’த்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை!
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
