சென்னை,மே 18- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளபடி, ‘நமது தெருவில், நமது எம்.எல்.ஏ’ என்கிற மக்கள் சந்திப்பு இயக்கம் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் நேற்று (17.5.2023) தொடங் கப்பட்டது. ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி – வார்டு 109, பாகம் 13, 14, 15 மற்றும் 16 ஆகியவற்றில் திருவள்ளுவர்புரம் முதல் தெரு, இரண்டாவது தெரு, மூன்றாவது தெரு, சக்தி நகர் இரண்டாவது தெரு, நான் காவது தெரு ஆகிய பகுதிகளில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் கள ஆய்வில் ஈடுபட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட் டறிந்தார். அப்போது பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் ஆகியவற்றின் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன், பொதுமக்களின் கோரிக்கைகள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, அறி வுறுத்தல்களை வழங்கினார்.