செய்தியும் சிந்தனையும் அயோத்தி விளம்பர வெளிச்சத்தில் நிதின் கட்கரியின் குடும்ப தீபாவளிப் படம்: ஒருபுறம் கோடிகள்; மறுபுறம் எண்ணெய் சேகரிக்கும் சிறுமி

2 Min Read

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேத்தியுடன் நாக்பூரில் தீபாவளியைக் கொண் டாடும் படம் ஒன்று சமூக ஊடகங் களில் பரவி வருகிறது.

ஆனால், மறுபுறம் இதே தீபாவளி நேரத்தில், அயோத்தியில் பல கோடிகள் செலவு செய்து விளக் கேற்றிய சில மணி நேரங்களிலேயே, விளக்கு எண்ணெய்க்காகவும், பூஜைப்பொருட்களுக்காகவும் கிழிந்த ஆடையுடன் தரையில் சிந்திய எண்ணெயைச் சேகரிக்கும் ஏழைச் சிறுமி ஒருத்தியின் படம் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியத்தில் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசு குறித்த கேள்விகளை எழுந்துள்ளன.

அயோத்தியில் நடைபெறும் ‘தீபோத்சவம்’ எனப்படும் மாபெரும் விளக்கு வைக்கும் நிகழ்வுக்காக உத்தரப் பிரதேச அரசு பல கோடி களைச் செலவிட்டு வருகிறது. உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விளக்கு எரிப்பதற்கு மட்டும் ரூ. 34.17 கோடி செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் தற்போது வரை, அரசின் விளம்பரங்களின்படி, ஒரு கோடியே 13 லட்சம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு சரயு ஆற்றங்கரையில் ஏற்றப்பட்ட தீபம் மற்றும் பூஜைப் பொருட்களுக்குக் கோடிக்கணக்கில் அரசு பணம் செலவழித்த விவகாரம் அப்போது பெரும் விவாதப் பொருளானது.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தீபாவளிக்கு விளக்கு வைக்க அரசு ஒதுக்கும் பணம் குறித்த சரியான தகவலை உத்தரப் பிரதேச அரசு முறையாக வெளியிடவில்லை. ‘தைனிக் ஜாகரன்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, இந்த நிதியானது அயோத்தி நகர மேம்பாடு என்ற பெயரில் திருப்பிவிடப்பட்டு, அங்கிருந்து செலவழிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஊடகங்களின் தகவல்கள் மற்றும் செலவுக் கணக்குகளை வைத்துப் பார்க்கும்போது, சாமியார் அரசு ஆட்சியில் அமர்ந்த 2017 முதல் இந்த ஆண்டு வரை விளக்கு வைக்கும் நிகழ்வுக்காக மட்டும் ரூ. 100 கோடிக்கும் மேல் செலவழித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பரவும் படங்கள் சொல்லும் பாடம்:

அயோத்தியில் மாபெரும் விளக்கு விழாக்கள் மூலமாகப் புதிய கின்னஸ் சாதனைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அந்தச் சாதனைகளின் ஒளிக் கோட்டிற்கு வெளியே, ஒருவேளை உணவுக்காகப் போராடும் குழந்தைகளின் வறுமை மாறாமல் தொடர்வது, நாட்டின் பொருளாதார  வளர்ச்சி குறித்த கேள்வியை எழுப்புகிறது.

வறுமை ஒழிப்புக்கான திட் டங்களைவிட, விளம்பரத்திற்காகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவழிக்கப்படும்போது, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலைமை மேம்படுமா என்ற சிந்தனையை இந்த இரண்டு படங்களும் ஒருசேர நம்மிடையே விதைக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *