சென்னை, அக்.19 கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, திருச்சி சிறுகனூரில் திராவிடர் கழகம் சார்பில் உருவாகி வரும் ‘பெரியார் உலகம்’ அமைக்கும் பணிக்காக தி.மு.க சார்பில், தி.மு.க நாடாளுமன்ற. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று (18.10.2025) காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.1 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ‘‘பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளத்தில் பதி விட்டுள்ளார்.
மேலும் அவர், ‘‘தமிழுலகம் பகுத்தறிவும், சுயமரி யாதை யும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி – சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-அய் தமிழர் தலைவர் மானமிகு கி வீரமணி அவர்களிடம் வழங்கினேன்! பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!’’ என்றும் பதிவிட்டுள்ளார்.
