ஹிந்தி மொழிக்குத் தடையா? வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம்

1 Min Read

சென்னை, ஆக.16  ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கலாக உள்ளதாகப்  பரவும் செய்தி, முற்றிலும் வதந்தியே என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது.

‘‘தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே. அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை’’  என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார். ‘‘வதந்தியைப் பரப்பாதீர்!” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *