தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்

1 Min Read

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும், நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியையும் கண்டித்து

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும், நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியையும் கண்டித்து, அக்டோபர் 14 அன்று சென்னையிலும், அக்டோபர் 15 அன்று, விருத்தாசலம், அரியலூர் ஆகிய நகரங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் சிறப்புக் கூட்டங்கள் நடைபெறும்.

அக்டோபர்  16 அன்று காலை தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் மாநகரங்கள்:

  1. கோயம்புத்தூர், 2. திருச்சிராப்பள்ளி, 3. மதுரை,
    4. சேலம், 5. திருப்பூர், 6. ஈரோடு, 7. திருநெல்வேலி,
    8. ஆவடி, 9. வேலூர், 10. தூத்துக்குடி, 11. ஒசூர், 12. காஞ்சிபுரம்,
    13. கரூர், 14. புதுக்கோட்டை, 15. காரைக்குடி,
    16. கும்பகோணம், 17. திண்டுக்கல், 18. நாமக்கல்,
    19. கடலூர், 20. சிவகாசி, 21. திருவண்ணாமலை, 22. தஞ்சை, 23. தருமபுரி, 24. நாகர்கோவில், 25. புதுச்சேரி

தோழர்களின் முக்கியக் கவனத்திற்கு:

  1. மேலே அறிவிக்கப்பட்டுள்ளபடி அனைத்து நகரங்களிலும் அக்டோபர் 16 அன்று காவல்துறை அனுமதியுடன், மக்கள் பார்வையில்படும்படியான இடத்தில் ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.
  2. ஒவ்வொரு நகரத்திலும் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்போர், பங்கேற்றுச் சிறப்புரையாற்றவுள்ள சொற்பொழிவாளர்களின் பட்டியல் நாளை வெளிவரும்.
  3. சொற்பொழிவாளர்களை உடன் தொடர்புகொள்ள வேண்டும்.
  4. ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நகரங்களைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.

–  தலைமை நிலையம், திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *