பெண்களுக்கு வாய்ப்புத் தந்தால் பெரும் மாற்றத்தை உருவாக்குவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு

1 Min Read

அரசியல்

மதுரை,மே21- ‘பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரும் மாற்றத்தை உருவாக்கு வார்கள்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கூறினார். 

இந்திய வழக்குரை ஞர்கள் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாடு மதுரை உலக தமிழ் சங்கத்தில் 19.5.2023 அன்று நடந்தது. துணைத்தலைவர் சாமிதுரை வரவேற்றார். தேசிய துணைத்தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மாநாட்டை துவக்கி பேசுகையில், ‘‘நீதிபதி ஆவதால் நல்ல பல காரியங்களை செய்ய முடியும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் வைகையில் தடுப்பணை கட்டி, வற்றாத அளவுக்கு வண்டியூர் தெப்பக்குளத் தில் தண்ணீர் தேக்கி அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடிந்தது.

மிகவும் அற்புதமான அரசமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். பல நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கப் படவில்லை.

இந்தியா பலமாக இருப் பதற்கு நமது அரசமைப்பு சட்டம் தான் காரணம். ஆணுக்கு பெண் சமம் என்ற சமநீதியைக் கொண்ட தும் நமது நாடு மட்டுமே. நீதி மன்றம் எந்த விசயத் தையும் சமமாகவே பார்க்கிறது. 

பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரும் மாற் றத்தை உருவாக் குவார்கள். சென்னை உயர்நீதிமன் றத்தில் 14 பெண் நீதிபதிகள் உள்ளனர்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *