கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.9.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* கரூர் துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய 3 பேர் கைது.. எச்சரித்தபடியே காவல்துறையினர் அதிரடிச் செயல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கேரள சட்டபேரவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்று வழி என கண்டனம்.

* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நீதிமன்ற வழக்கில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர காங்கிரஸ் வேண்டுகோள்.

தி இந்து:

* பொது நிகழ்வுகளை நடத்துவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உருவாக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* வாக்குத் திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பீகாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சனம்.

தி டெலிகிராப்:

* பிரதமர், முதலமைச்சர் பதவி நீக்க மசோதா. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இருந்து விலக காங்கிரஸ் முடிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தென் அமெரிக்கச் சுற்றுப் பயணத்தில் ராகுல் காந்தி. கொலம்பியாவை அடைந்தார்; மாணவர்கள், அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடத் தொடங்கினார்

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *