விண்வெளியில் இந்தியாவின் முதல் பெண் கல்பனா சாவ்லா:
விண்வெளித் துறையில் உண்மையான முன்னோடியாக உள்ள கல்பனா சாவ்லா, 1997 இல் விண்வெளி விண்கலம் கொலம்பியா (STS-87) மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண் ஆனார். அவர் இரண்டு விண்வெளிப் பயணங்களை முடித்தார். மொத்தம் 30 நாட்கள், 14 மணிநேரம் மற்றும் 54 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்தார். நல்வாய்ப்பாக, 2003 இல் கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதில் தனது உயிரை இழந்தார். ஆனால் அவரது தாக்கம் தொடர்ந்து விண்வெளித்துறையில் ஆர்வமுள்ள இளம் பெண்களை ஊக்குவிக்கிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாதனை விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்:
ஒரு இந்திய தந்தைக்கு பிறந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி வீராங்கனை ஆவார். அவர் இரண்டு விண்வெளி பயணங்களில் 321 நாட்களுக்கு மேல் விண்வெளியில் செலவிட்டுள்ளார். அவர் ஏழு முறை விண்வெளி நடைப்பயணங்களை நடத்தியுள்ளார். இதன் மூலம், அதிகநேரம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் அறிவியல் சோதனைகளிலும் வில்லியம்ஸ் முக்கிய பங்கு வகித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் தற்போது விண்வெளியில் உள்ளார். இந்த மாத இறுதியில் பூமிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ராக்கெட் பெண் ரிது கரிதல்:
இஸ்ரோவில் மூத்த விஞ்ஞானியான ரிது கரிதல் 2013 இல் இந்தியாவின் வரலாற்று செவ்வாய் சுற்றுப்பாதை மிஷன் (மங்கள்யான்) க்கு துணை செயல்பாட்டு இயக்குநராக முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் 2019 இல் சந்திரயான் 2 பயணத்திற்கான மிஷன் இயக்குநராக பணியாற்றினார். அவரது பங்களிப்புகள் இந்தியாவை கிரகங்களுக்கு இடையேயான ஆய்வில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக நிலைநிறுத்தியுள்ளன.
இந்தியாவின் விண்வெளி பயணங்களில் முக்கிய விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்:
இஸ்ரோவில் மூத்த விஞ்ஞானியான நந்தினி ஹரிநாத் மங்கள்யான் உட்பட 14 விண்வெளி பயணங்களில் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் செவ்வாய் கிரக பயணத்திற்கான செயல்பாட்டு துணை இயக்குநராக பணியாற்றினார் மற்றும் இஸ்ரோவின் தன்னாட்சி மென்பொருள் அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். விண்வெளி அறிவியலுக்கான அவரது அர்ப்பணிப்பு பல இளம் பெண்கள் STEM துறையில் பணியாற்ற ஊக்கமளித்துள்ளது.
இந்தியாவின் ஏவுகணை பெண் டெஸ்ஸி தாமஸ்:
நேரடியாக விண்வெளித்துறையில் பணியாற்றுபவராக இல்லாவிட்டாலும், டெஸ்ஸி தாமஸ் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முன்னணி நபராக உள்ளார். டிஆர்டிஓவில் அக்னி 4 மற்றும் அக்னி 5 ஏவுகணைகளின் திட்ட இயக்குநராக இந்திய ஏவுகணை திட்டத்தை வழிநடத்திய முதல் பெண்மணி இவர் ஆவார். விண்வெளி பொறியியலில் அவரது நிபுணத்துவம் இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
விண்வெளி ஆய்வுப் பயணத்தை வடிவ மைப்பதில் இந்த அய்ந்து குறிப்பிடத்தக்க பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
பன்னாட்டு மகளிர் தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், அவர்களின் சாதனைகள் அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத் துறைகளில் தங்கள் முத்திரையைப் பதிக்க விரும்பும் இளம் பெண்களுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகச் செயல்படுகின்றன.
உறுதியுடனும் ஆர்வத்துடனும் செயல் பட்டால், நட்சத்திரங்கள் கூட பெண்களால் அடையக்கூடியவையே என்பதை அவர்களின் பயணங்கள் நிரூபிக்கின்றன.