வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

1 Min Read

வெட்டிக்காடு செப்.22- தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்தநாள் விழா வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சரியாக 10:30 மணியளவில் கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி தந்தை பெரியாரின் படத்திற்கு பள்ளி முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மாணவர்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு முன்பு நின்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடி வாழ்த்தி மகிழ்ந்தனர். இறுதியாக மாணவர்களுக்கும் பணிபுரியும் அனைவருக் கும் பள்ளி முதல்வர் கடலை மிட்டாய் வழங்கி மகிழ்ந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *