கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழா

1 Min Read

கோவை, செப். 21– கோவை ஆற்றுப்பாலத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மாலை 6 மணி அளவில் நடை பெற்றது.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

விழாவில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெரியார் சிலையை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு

நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.சந்திர சேகர் வரவேற்புரை வழங்கினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கோவை மாவட்ட கழக செயலாளர் ஆ.பிரபாகரன், மற்றும் கோவை கு.இராமகிருட்டிணன், விசிக மாவட்ட செயலாளர் ஸ்டிபன் சுந்தர், திமுக மாநில மாணவரணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி, மற்றும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.ரவி, துணை மேயர் வெற்றி செல்வன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் ஏராளமான திமுக பொறுப்பாளர்கள், திராவிடர் கழகத்தின் கோவை மாவட்ட மாநகர பகுதி கழக ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி தோழர்கள் மற்றும் நீலமலை,மேட்டுப்பாளையம், கணியூர், கோபி, பொள்ளாச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *