சோழிங்கநல்லூர் பெரியார் பிறந்த நாள்

சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் நாளை (17/09/2025) மாவட்ட கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகள்.

காலை 7.00மணி விடுதலை நகர்  படிப்பகம்.. அய்யா படத்திற்கு மாலை அணிவித்தல்

7.30 தலைவர் பாண்டு இல்லத்தில் கொடியேற்றம்

8.00மணி பக்தவச்சலம்நகர் அரசடி விநாயகர் ஆலயம் அருகே.. அய்யா – அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தல் மற்றும் கொடியேற்றுதல் .

8.45 ஆலந்தூர் அய்யா சிலைக்கு மலை அணிவித்தல்

10.00 மணி பெரியார்திடல் – ஆசிரியர் அவர்கள் தலைமையில் அய்யா நினைவிடத்தில் மரியாதை செய்யும் நிகழ்வில் கலந்து கொள்ளுதல்.

மாலை  6.30 மணி – தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

எம்ஜிஆர் நகர் அங்காடி (மார்க்கெட்)

அருகே நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றும் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *