சீ​தா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவு நாள்: மார்க்​சிஸ்ட் கட்​சி​யினர் உடற்கொடை

1 Min Read

சென்னை, செப்.14  சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலா​மாண்டு நினைவுநாளையொட்டி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் உடற்கொடை செய்​தனர். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் சார்​பில் சீதா​ராம் யெச்​சூரி​யின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று (13.9.2025) தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்​டி, சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் அலுவல​கத்​தில் உடற்கொடை இயக்​கம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்​தது. மாநில தலை​வர் பெ.சண்​முகம் முதல் நபராக உடற்கொடை செய்த உறுதி மொழி படிவத்தை வழங்​கி​னார்.

தொடர்ந்​து, தலைமை குழு உறுப்​பினர்​கள் கே.​பால​கிருஷ்ணன், வாசுகி, மத்​திய குழு உறுப்​பினர்​கள் சம்​பத், பால​பார​தி, மாவட்ட செய​லா​ளர்​கள் ராமகிருஷ்ணன், வேல்​முரு​கன், செல்வா உள்​ளிட்​டோர் உடற்கொடை செய்த உறு​தி​மொழி படிவத்தை தமிழ்​நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணை​யத்​தின் உறுப்​பினர் செயலர் என்​.கோ​பாலகிருஷ்ணனிடம் வழங்​கினர்.

ஆராய்ச்சிக்கு பயன்படும்

சென்​னை, கோவை, ஈரோட்​டில் 350-க்​கும் மேற்​பட்​டோர்   (12.9.2025) உடற்கொடை செய்​தனர். தமிழகம் முழு​வதும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​கள் உடல் தானம் செய்​தனர்.

நிகழ்ச்​சி​யில் கே.​பால​கிருஷ்ணன் பேசி​ய​தாவது: இந்​தி​யா​விலேயே ஒரு தலை​வரின் நினைவு நாளை உடற்கொடை வழங்​கி, மருத்​து​வத்​துறையை புத்​துணர்ச்​சி ​யூட்​டும் நிகழ்ச்​சி​யாக நடத்​தப்​பட்​டது இதுவே முதல்​முறை. ஒரு​வர் இறந்​து​விட்​டால் அவர் இந்து மதமாக இருந்​தா​லும் வேறு எந்த மதமாக இருந்​தா​லும், அவரது உடலை உடற்​ கூ​ராய்​வுக்கு பயன்​படுத்தக் கூடாது என்ற தத்​து​வக் கோட்​பாடு இந்த நாட்​டில் நீண்ட கால​மாக இருக்​கிறது. அந்த கோட்​பாட்​டுக்கு மாற்​றாக தான், மனிதன் இறந்த பிறகும் அவனது உடல் இந்த உலகுக்கு பயன்​படுத்த முடி​யும் என்ற அடிப்​படை​யில் தற்​போது இந்த உடற்கொடை நிகழ்வு நடை​பெற்​றுள்​ளது. உடற்கொடை செய்​வதன் மூலம், இந்த உடல் மண்​ணுக்கு போய் வீணாவதை விட, மருத்​து​வத்​துறைக்​கும், புதிய ஆராய்ச்​சிக்​கும் பயன்​படும்.  இவ்​வாறு அவர் பேசி​னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *