சென்னை, செப். 12- சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பிலும், சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
கனகசபை
இந்தவழக்கு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது, கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்தும், வார நாட்கள், வார விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் எவ்வளவு பேர் தரிசனம் மேற்கொள்ள முடியும் என்பது குறித்தும் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி அறநிலையத்துறை தரப்பில் கனகசபையில் சில மாறு தல்களை செய்தால் சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் வரை எளிதாக சுவாமி தரிசனம் செய்ய முடியும் என கடந்தமுறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அனுமதி மறுப்பு
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர் வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர் கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “கனகசபையில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. பக்தர்களை அனுமதிக்கவும் முடியாது. விஅய்பிக்கள் மற்றும் தீட்சிதர்களுக்கு மட்டுமே கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைதான் ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது” என்றார்,
அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன், “பொது தீட்சிதர்கள் தரப்பில் தற்போது திடீரென பல்டி அடித்து பக்தர்களுக்கு கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள அனுமதி கிடையாது என தெரிவிக் கப்படுவதை ஏற்க முடியாது. கடந்த 2008 முதல் பக்தர்களுக்கு கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தட்டு காணிக்கை மூலமாக கோயிலை நிர்வகித்து வருகிறோம் எனக் கூறும் தீட்சிதர்கள் பக்தர்களை கனகசபை மீது ஏற அனுமதிக்க மாட்டோம், எனக்கூற முடியாது” என்றார்,
அதையடுத்து நீதிபதிகள், பக்தர் களுக்கு கனகசபையில் அனுமதி கிடையாது எனக் கூறுவது தொடர் பாக மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தர விட்டு விசாரணையை அக்.9-க்கு தள்ளி வைத்துள்ளனர்.