மெக்சிகோவில் தசை தின்னும் ஒட்டுண்ணி பாதிப்பு 53% அதிகரிப்பு ஒரு வயதான பெண் உயிரிழப்பு

1 Min Read

மெக்சிகோ சிட்டி, ஆக. 31– மெக்சிகோவில் ‘நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவம்’ (new world screwworm) எனப்படும் தசை தின்னும் ஒட்டுண்ணி பாதிப்பு கடந்த நான்கு வாரங்களில் 53% அதிகரித்துள்ளது. பெரும்பாலும் விலங்குகளில் காணப்பட்ட இந்த ஒட்டுண்ணி, தற்போது மனிதர்களிடமும் கண்டறியப்பட்டுள்ளது.

பசுக்கள், குதிரைகள், நாய்கள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளின் உடலில் இந்த ஒட்டுண்ணி பரவலாகக் காணப்படுகிறது. இந்த ஒட்டுண்ணி தொற்றுக்கு ஆளான 86 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், அமெரிக்காவில் இந்த ஒட்டுண்ணியின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. எல் சால்வடோர் என்ற லத்தீன் அமெரிக்க நாட்டிற்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டதாகப் பதிவானது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டிலேயே இந்த ஒட்டுண்ணி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருந்தாலும், லத்தீன் அமெரிக்காவில் அதன் பரவல் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த ஒட்டுண்ணி தொற்று, நோய்வாய்ப்பட்ட வர்கள் மற்றும் வயதானவர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என்பதால், அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *