தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் 2ஆம் இடம் – 2 வீரர்கள் மாநில போட்டிக்கு தகுதி

1 Min Read

அரியலூர், ஆக. 31- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் (2025-2026) ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் 26/08/2025 முதல் 08/09/2025 வரை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது.

இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 12 வயது முதல் 19 வயது வரை வயது வரம்பு பிரிக்கப்பட்டது .இதில் 26/08/2025 அன்று நடைபெற்ற கூடைப்பந்து போட்டி ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மாணவர்கள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

குழு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் பரிசாக மொத்தம் ரூபாய் 24,000 வங்கியின் மூலம் செலுத்தப்படும்.  மேலும் இதில் பன்னிரண்டாம் வகுப்பை சேர்ந்த என்.மணிஷ்குமார், எஸ்.அகிலன் ஆகிய இருவரும் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் போட்டிக்கு விளையாட தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ் ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரை பள்ளி தாளாளர் ,முதல்வர் ஆர்.கீதா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *