இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் ஒப்புதல் பணய கைதிகளை விடுவிக்கவும் சம்மதம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஜெருசலேம், ஆக. 20- இஸ்ரேலுக் கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங் கரவாத அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்து வதற்கான 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ஒப்புதல் தெரிவித்துஉள்ளது. மேலும், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது.

62 ஆயிரம் பேர் பலி

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் இந்தப் போரில் இதுவரை 62,000க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரை நிறுத்த சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு, பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்தத் தயார்” என அறிவித்திருந்தார்.

பாலஸ்தீன நாடு
அமைய வேண்டும்

ஆனால், தனி பாலஸ்தீன நாடு அமைய வேண்டும் என்று ஹமாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், இஸ்ரேல் ராணுவம் கிழக்கு காசாவில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரைக் காத்துக்கொள்ள புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இச்சூழலில், ஹமாஸ் அமைப்பு தற்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது,

பதற்றமான சூழலில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *