தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் – 2025 பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

1 Min Read

திருச்சி, ஆக. 20- திருச்சி, புனித வளனார் கல்லூரியில் 10.08.2025 அன்று, தேசியப் பள்ளி கள் கூட்டமைப்பு, பள்ளி களுக்கான தற்காப்புக்கலை விளையாட்டுக் கூட்ட மைப்பு, இளைஞர் தற்காப்புக் கலை விளை யாட்டுக் கூட்டமைப்பு, உலக சார்பட்டா சிலம்பக்  கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான  சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது

இந்தப் போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அய்நூறுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவர்கள் பங் கேற்று தங்கள் சிலம் பத் திறமைகளை வெளிப் படுத்தினர்.

இதில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று, சுருள்வாள் போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவர் எஸ் தேவராஜ்   முதல் இடத்தோடு தங்கப் பதக்கமும், ஒற்றைக் கம்புப் போட்டியில் 6ஆம் வகுப்பு மாணவர் வி.அஷ்வர்த்  முதல் இடத்தோடு தங்கப் பதக்கமும் வென்று தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளனர்.

மாணவர்களின் இந்த வெற்றிக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர்  தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *