தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 125 கோடியில் 500 நகர்ப்புற நல வாழ்வு மய்யங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Viduthalai
3 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூன் 7- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.125 கோடி யில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களை காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த 2022 மே 7ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந் ததை முன்னிட்டு, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ‘‘ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்க ளின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநக ராட்சிகள், 63 நகராட்சி பகுதிகளில் ரூ.177 கோடியில் 708 நகர்ப்புற நல வாழ்வு மய்யங்கள் புதிதாக அமைக்கப் படும்’’ என்று அறிவித்தார்.

இதில் முதல்கட்டமாக, தமிழ்நாட் டின் பல்வேறு பகுதிகளிலும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மய் யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றான, சென்னை தேனாம்பேட்டை விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப் புற நலவாழ்வு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(6.6.2023) திறந்து வைத்தார்.

அங்கிருந்தபடி, மற்ற மய்யங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து முதலமைச்சர் பேசியதாவது:

‘திராவிட மாடல்’ ஆட்சியில் கல்வி, மருத்துவம் இரண்டையும் இரு கண் களாக போற்றி வருகிறோம். ஆனால், மிக பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு மட்டும் இது புலப்படாமல், தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தேசிய அளவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் முதல் 3 மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு உள்ளதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட் டத்தில் இதுவரை 1.51 கோடி பயனாளி களுக்கு முதல்முறை சேவைகள், 3.04 கோடி பேருக்குதொடர் சேவைகளும் வழங்கப் பட்டு வருகிறது. இத்திட்டத்தை உலக சுகாதார அமைப்பே பாராட்டி யுள்ளது. இதை அவர் படித்துப் பார்க்க வேண்டும்.

கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் நூற் றாண்டு நினைவு பன்னோக்கு மருத்து வமனை வரும் 15ஆம் தேதி திறக்கப் படுகிறது. 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் தற்போது திறக்கப்பட் டுள்ளன. இந்த மய்யங்களில், ரூ.66 கோடி மதிப்பில் 172 வகை முக்கியமான மருந்துகளும், 64 வகை அவசியமான ஆய்வக சேவைகளும் ஆண்டு முழுவ தும் தங்குதடையின்றி கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. 

அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் என்பது இந்தியாவுக்கே முன்னோடி யான திட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

மருத்துவம் நவீனமயமாக வேண்டும். புதிய நோய்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக நமது மருத் துவர்கள் செயல்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகள் நிறைய நடக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டுமின்றி, மருத்துவ வல்லுநர்களையும் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் எப்படி ஏழை எளியோரின் நம் பிக்கையாக இருக் கிறதோ, அதை போலவே நகர்ப்புற நல வாழ்வு மய்யமும் செயல்பட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப் பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டி யன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மய்யத்திலும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைப் பணியாளர் நியமிக்கப்பட் டுள்ளனர். இம்மய்யம் காலை 8 முதல் பகல் 12 வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையும் செயல்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *