புரட்சிப்படை என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்திய மியன்மார் ராணுவம்

1 Min Read

மண்டலே, ஆக. 14- மியன்மாரின் மண்டலே நகரத்திற்கு வெளியே உள்ள டாங் யின் கிராமத்திற்கு அருகே, புரட்சிப்படை என்ற சந்தேகத்தில் மியன்மார் விமானப் படை நடத்திய தாக்குதலில் இந்தத் தாக்குதலில் 8 முதல் 16 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத் தொடக்கத்தில், மியன்மார் ராணுவத்தினருக்கும், ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான புரட்சிப்படைக் குழுவினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.

இந்தப் மோதலின் போது, அப்பகுதியில் இருந்த லாரிகளை குறிவைத்து விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. இரண்டு மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில், அப்பாவிப் பொதுமக்கள் பலர் சிக்கி உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் பல பொதுமக்கள் காயமடைந்தனர் என்றும், அப்பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் சேதமடைந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது அதிகாரத்தை நிலைநிறுத்த ராணுவம் நடத்தும் இது போன்ற தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *