கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

1 Min Read

* வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மேனாள் பிரதமர் பேரனுக்கு சாகும் வரை ஆயுள்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஓபிசி பிரிவினர் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் பாடுபடுகிறது, முதலமைச்சர் ரேவந்த் பெருமிதம்.

* பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம், ஒரு மோசடி என்கிறார் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவன் வர்மா

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘அரசியலமைப்பு முற்றுகையிடப்பட்டுள்ளது’: “அவர்களின் (பாஜக-ஆர்எஸ்எஸ்) சித்தாந்த முன்னோர்கள் மனுஸ்மிருதியை மகிமைப்படுத்தினர், மூவர்ணக் கொடியை நிராகரித்தனர், ஜனநாயகமற்ற ஒரு ஹிந்து ராஷ்டிரத்தை கற்பனை செய்தனர்” பாஜக-ஆர்எஸ்எஸ் ‘சித்தாந்த சதி’க்கு சதி செய்வதாக சோனியா காந்தி குற்றச்சாட்டு.

* பீகார் சிறப்பு தேர்தல் வாக்காளர் திருத்தம்: ஆகஸ்ட் 7 ஆம் தேதி டில்லியில் இந்திய கூட்டணித் தலை வர்கள் கூடுவார்கள் என்று பரூக் அப்துல்லா தகவல்.

தி இந்து:

* தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் “கைப்பாவையாக” மாறிவிட்டது; தேர்தல் ஆணையம் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பறிக்க விரும்புகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு.

* “மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ய முடியும். 2024 மக்களவைத் தேர்தலிலும் மோசடி நடந்துள்ளது. இதை நிரூபிக்க தரவுகளும் ஆவணங்களும் இப்போது உள்ளன. இதை நாங்கள் நிரூபிக்க போகிறோம்” காங்கிரஸ் சட்ட மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பீகாரில் இருந்து 6.5 லட்சம் வாக்காளர்களை தமிழ்நாட்டில் சேர்க்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *