ஆற்றல் மிகு இளைஞரணியினரே! துண்டறிக்கை பரப்பும் பணியில் ஈடுபடுவீர்! உங்களுக்கு என் அன்புக் கட்டளை!

1 Min Read

திராவிடர் கழகத்தின் ஆற்றல் மிகு இளைஞரணித் தோழர்களே!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – திராவிடர் கழக மாநில மாநாட்டு அணிவகுப்புக்கான பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சிகள் நாடெங்கும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெருமளவில் பங்கேற்று கட்டுக்கோப்பு மிக்க பயிற்சிகளைப் பெற முந்துங்கள்!

நேற்று (31.07.2025) ‘விடுதலை’யில், தமிழ்ப் பண்பாட்டை – வரலாற்றை அபகரித்து, காவிச் சாயம் பூச நினைக்கும் பா.ஜ.க.வின் புரட்டுகளை அம்பலப்படுத்தி வெளிவந்துள்ள “ராஜராஜன் மீது அப்படி என்ன திடீர்க் காதல்? மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?” என்ற சிறப்பான கட்டுரை துண்டறிக்கையாகத் தயாராகிறது. அதனைத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் வீடுவீடாக, கடை கடையாக ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதி வரை கொண்டு போய்ச் சேருங்கள்! திராவிடப் பண்பாட்டின் மீதான படையெடுப்பைத் தகர்த்திடுங்கள்! இது திராவிடர் கழக இளைஞரணியினருக்கு எம் அன்புக் கட்டளை!

– கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை     

1.8.2025     

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *