பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவத் தலைவி – அணித் தலைவிகளின் பதவி ஏற்பு விழா

1 Min Read

திருச்சி, ஜூலை 31- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் பதவி ஏற்பு விழா நேற்று (30.7.2025) நடைபெற்றது. மொழி வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையில், இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து மாணவிகளின் முன்னிலையில் நடை பெற்றது.

தேர்தல் குறித்த விழிப்புணர்வு

பள்ளி மாணவத் தலைவியை தேர்ந்தெடுக்க தேர்தல் முறை ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தேர்தலில் மாணவிகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து. மாணவத் தலைவி மற்றும் துணைத் தலைவியைத் தேர்வு செய்வதுடன், தேர்தல் நடைமுறை மற்றும் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வையும் பெறுகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக பள்ளி மாணவத் தலைவி, துணைத்தலைவி, நான்கு அணிக்களுக்கான (House Captain & Vice Captain) தலைவி மற்றும் துணைத் தலைவி, NCC, NSS, NGC,JRC, & Guide இயக்கங்களுக்கான தலைவி, துணைத்தலைவி மற்றும் தமிழ், ஆங்கிலம். கணிதம், வானவில் மற்றும் சமூகஅறிவியல் மன்றங்களுக்கான செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளி தலைமையாசிரியர் பதவி பிரமாணம் செய்து வைத்து பேட்ஜ் அணிவித்தார். பதவியேற்ற மாணவிகள் தங்களுக்கான கடமைகளை செய்வதற்கான உறுதிமொழியை ஏற்று. பதவி ஏற்றுக்கொண்டனர். இறுதியாக விழ நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *