பிற இதழிலிருந்து…

Viduthalai
4 Min Read

எழுதி வளர்ந்த இயக்கம்

* பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

மனுநீதியா, சமூகநீதியா?

திராவிட இயக்கம், அதன் சிந்தனைகள், சாதனைகள் ஆகியவற்றைத் தாங்கி ஏராளமான புத்தகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை எப்படித் தேர்வு செய்வது, எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்பதை அறிவுரைக்கிறது.

ஓர் அரசியல் இயக்கம் அல்லது ஒரு கட்சியில் இருப்பவர்கள், மூன்று விதமான நூல்களைப் படித்தாக வேண்டிய கடமை உள்ளது.

ஒன்று, நாம் சார்ந்திருக்கிற, ஏற்றுக் கொண்டி ருக்கிற இயக்கத்தின் வரலாறு, கோட்பாடு ஆகியன பற்றிய நூல்களைப் படிப்பது. இரண் டாவது, உலக அரசியல், வரலாறு, இலக்கியம் முதலான பொது நிலையிலான நூல்களைப் படிப்பது. மூன்றாவது, நம் கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்ட இயக்கத்தின் கருத்துகளையும், அதன் அடிப்படைக் கோட் பாடுகளையும் படித்து அறிவது!

மூன்றாவது வகையிலான ஒரு நூல் குறித்தே இப்போது நாம் பார்க்க இருக்கிறோம். தமிழ்நாட்டின் மய்ய அரசியல், ஆரிய – திராவிடப் போராட்டமே என்பதை நாம் அறிவோம். இரண் டுக்குமான அடிப்படை வேறுபாடு, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை ஏற்கலாமா, கூடாதா என்பதுதான்.

மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு வருணங்களாகப் பிரித்துப் பார்த்து, மேல் கீழ் என்று அடுக்குவது ஆரியம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது திராவிடம். படைப்பின் அடிப்படையிலேயே ஆண் உயர்ந் தவன், பெண் தாழ்ந் தவள் என்பது ஆரியம். ‘பெண்ணும் ஆணும் சமமானவர்களே’ என்பது திராவிடம். சுருக்கமாகச் சொன்னால், ‘மனுநீதியா சமூக நீதியா?’ என்பதுதான் அன்று தொட்டு இன்றுவரை யில் நடந்து வரும் மிகப்பெரிய சமூக, அரசியல் போராட்டம் என்று சொல்லலாம். நாம் படிக்க இருக்கும் நூலின் பெயர் ‘அசல் மனுதர்ம சாஸ்திரம்’ என்பது!

இந்துச் சட்ட மூல நூல்

இந்த நூல் முதன்முதலாக, 1919- ஆம் ஆண்டு திருவந்திரபுரம் கோமாண்டூர் இளைய வில்லி ராமானுஜ ஆச்சாரியாரால் மொழிபெயர்க்கப் பெற்று, சென்னை, பத்மநாப விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

அப்போது அதற்கு ‘மனுதர்ம சாஸ்திரம்’ என்று பெயர். அதைத்தான், அப்படியே எழுத்து மாறாமல், ‘அசல் மனுதர்ம சாஸ்திரம்’ என்னும் பெயரில் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் பிறகு வெளியிட்டுள்ளது.

மனுநீதி என்பது மவுரிய சாம்ராஜ்யம் அழிக்கப்பட்டு, அந்தப் பேரரசின் கடைசி மன்னனைக் கொன்றுவிட்டு, ஆட்சிக்கு வந்த புஷ்யமித்ரன் (கி.மு. 185-149) என்னும் ஒரு பார்ப்பனரின் ஆட்சியில், ஒரு குழுவினரால் எழுதப்பட்டிருக்க லாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ‘அரச கொலை அல்லது பார்ப்பனியத்தின் வெற்றி’ என்னும் தன் நூலில், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் இந்நூல் குறித்து விரிவாக எழுதி உள்ளார்.

எப்போதோ எழுதப்பட்ட இந்நூல் பற்றி இப்போது ஏன் நாம் பேச வேண்டும்? அந்நூல் குறிப்பிடும் செய்திகள் இன்றைக்கு நடைமுறையில் உள்ளனவா என்று சிலர் கேட்கின்றனர். ஆனால் ‘இந்துச் சட்டம்’ (HINDU LAW) என்பதற்கான மூல நூல்களில் ஒன்றாக இதுவும் குறிக்கப்பட்டி ருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. எனவே, இந்நூல் பற்றி அறிந்து கொள்வது மிக மிகத் தேவையானதாகும்.

பாகுபாடுகள் நிறைந்த நூல்

இந்நூலில் சமூக சமத்துவத்துக்கு எதிராகப் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. அல்லது, அப்படிப்பட்ட செய்திகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன என்றும் கூறலாம். எடுத்துக் காட்டாக, ஜாதி அடிப்படையிலும், பால் அடிப்படையிலும் எப்படிப்பட்ட பாகுபாடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை மட்டும் நாம் பார்க்கலாம்.

ஒன்பதாவது அத்தியாயத்தில் கூறப்பட்டி ருக்கும் இரண்டு விதிகள் இவை. “வேத சாஸ்திரம் அறிந்த, கீர்த்தி பெற்ற, கிருகஸ்த பிராமணனுக்கு சிசுருஷை செய்வதே சூத்திரனுக்கு மோட்சத்தை தருவிக்கிற மேலான தர்மமாகும் (334)”.

அதற்கு அடுத்த சூத்திரம், “உள்ளும் புறமும் பரிசுத்தனாய், உயர்ந்த ஜாதியானைக் கொடுமய் யாகப் பேசாமல் பிராமணனுக்கு-அவன் இல்லா விடில் சத்ரியனுக்கு-அவன் இல்லாவிடில் வைசி யனுக்கு-மேலாகப் பணிவிடை செய்துகொண்டு, அஹங்காரம் இல்லாமல், நாடோறும் அடுத்து இருக்கிற சூத்திரன் மேலான சாதி ஆவான்”(335).

எனவே சூத்திரன் என்பவன், மேலே உள்ள மூன்று வருணத்தார்க்கும் பணிவிடை செய்வதே, அவனுக்கான வாழ்நாள் பணி என்கிறது மனு(அ) தர்மம்!

கசடுகளைக் களைய… கசடறக் கற்க… 

பெண்களைப் பற்றி – பார்ப்பனப் பெண் களாகவே இருந்தாலும் – மிக இழிவான இடத்தில் வைத்து மனுநீதி பேசுகிறது. இரண்டாவது, அய்ந்தாவது, ஒன்பதாவது அத்தியாயங்களில் பெண்களைப் பற்றிய இழிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பெண் சிறுமியாக இருக்கும் போது தந்தைக்கும், திருமணம் ஆன பிறகு கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் அடங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறது! கணவன் குடிகாரனாக இருந்தாலும், இன்னொரு பெண்ணோடு தொடர்புடையவனாக இருந்தாலும், சூதாடியாக இருந்தாலும், நோயுற்றவனாக இருந்தாலும், அவனை அவன் மனைவி தெய்வமாக வணங்க வேண்டும் என்கிறது இந்த மனு (அ)நீதி! எல்லாவற்றையும் விட ஒன்பதாவது அத்தியாயத்தில், 19-ஆவது சூத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி மிகக் கொடுமய்யானது. அது இது தான்-“மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று அனேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது”.

எனவே, பெண்களை எப்போதும் கண் காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அது சொல்லும் நீதி. இப்படிப்பட்ட ஒரு நூலை, மிகப்பெரிய சாஸ்திர நூல் என்று அறியாமையின் காரணமாக இன்றும் பலர் கூறி வருகிறார்கள்.

எனவேதான், திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர்கள் “உள்ளுவரோ மனு நீதி, ஒரு குலத்துக் கொரு நீதி” என்கிறார் மனோன்மணீயம் நூலில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. இருப்பினும், இந்நூலில் உள்ள கசடுகளை அறிந்து, மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக நாமும் படிக்க வேண்டி இருக்கிறது! 

நன்றி: ‘முரசொலி’,13.6.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *