ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வளையப்பந்து போட்டியில் வெற்றி

1 Min Read

ஜெயங்கொண்டம், ஜூலை 25- பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி மேலணிக்குழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 24.07.2025 அன்று நடைபெற்றது.

திராவிடர் கழகம்

ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு   வளையப்பந்து போட்டியில் பெண்கள் 17   வயதிற்கு உட்பட்ட  இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும், ஆண்கள் 14 வயதிற்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில்    இரண்டாம் இடத்தையும், பெண்கள் 17 மற்றும் 19  வயதிற்கு உட்பட்ட ஒற்றையர்  பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.  இதில் முதலிடம் பிடித்த  அணி மாவட்ட போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரைப் பள்ளி தாளாளர் முதல்வர் R.கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள் ஆகியோர்கள் வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *