ஜெயங்கொண்டம் பெரியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம்

1 Min Read

ஜெயங்கொண்டம், ஜூலை 18– பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஜெயங் கொண்டம் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி 16.7.2025 அன்று தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

போட்டிகள் 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவிகள் பன்னி ரெண்டாம் வகுப்பை சேர்ந்த அபிநயாசிறீ முதலிடத்திலும், வெர்ஜின் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

மேலும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என குறிப்பிடத்தக்கது. போட்டியில் வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள், உட்பட பலர் வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *