மக்களை மதம் மற்றும் ஜாதியால் பா.ஜ.க.வினர் பிரித்தனர் தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

1 Min Read

அய்தராபாத், ஜூன் 16 – பா.ஜ. க.வினர் தங்கள் கட்சிக் காக மட்டுமே உழைத்து மக்களை மதம் மற்றும் ஜாதியால் பிரித்தனர் என்று தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் கே.பி.விவேகானந்தா குற்றம் சாட்டினார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விவேகானந்தா கூறியதாவது: தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு சரியான முகம் தலைவர் இல்லை என்பதை அமித் ஷாவின் வருகை தெளி வாக காட்டுகிறது. கரு நாடக தேர்தலின்போதும் அதுதான் நடந்தது.  நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா கூட கருநாடகாவில் இருந்தார்கள். ஆனால் மக்கள் நம்பவில்லை. தேசிய தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த 9 ஆண் டுகளாக எங்களுக்கு ஒரு தேசிய திட்டம் கூட வழங்கப்படவில்லை. ஆனோல் ஒன்றிய அரசு நமது கிராமங்களையும், பேரூராட்சிகளையும் அங்கீகரித்து இருப்பது நமது வளர்ச்சியை காட் டுகிறது.மாநில பா.ஜ.க. வின் செயல்பாடு முற்றி லும் தோல்விய டைந்துள் ளது. அவர்கள் தங்கள் கட் சிக்காக மட்டுமே உழைத்து மக்களை மதம் மற்றும் ஜாதியால் பிரித்தனர்.  

தெலங்கானா மக்கள் அதை ஒரு போதும் ஏற் றுக்கொள்ள மாட்டார்கள் கருநாடகாவில் பா. ஜ.க.வின் தவறான ஆட்சி மற்றும் ஊழலால்தான் காங்கிரஸ் ஆட்சியை பிடித் தது. இவ்வாறு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *