வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக சான்றிதழ்

1 Min Read

தஞ்சாவூர், ஜூலை 16– 12.07.2025 அன்று மாலை 5.00 மணியளவில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்  ச.முரசொலி தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100%  தேர்ச்சி பெற்றமைக்காக சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த  விழாவில் நமது வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் சு.சாந்தி  கலந்துகொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலியிடமிருந்து மெடல், சான்றிதழ் மற்றும் பொன்னாடையும், திருவையாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் துரை.சந்திரசேகரனிடமிருநது கேடயமும் பெற்றார்.

இவ்விழாவில் மாநகர மேயர், துணை மேயர், தஞ்சை சட்டமன்ற  உறுப்பினர் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்

பள்ளிக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு 100% தொடர் தேர்ச்சி அளித்தமைக்காக அரசு சிறப்பித்ததற்கு முதல்வர் மற்றும் ஆசிரியர் பெரு மக்களை பள்ளி தாளாளர் வாழ்த்தி மகிழ்ந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *