மழைத்துளி வழியே மின்சார ஒளி!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாதபடி மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டுவது காலத்தின் கட்டாயம். நீர்மின் திட்டங்கள் இதற்குப் பெரிய அளவில் உதவும். ஆனால், இதற்கென பெரிய அணைகள் கட்டுவது அதிக செலவு வைக்கும்.

அதேபோல, கடல் அலைகளில் இருந்து மின்சாரம் எடுப்பதும் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும் விஷயமல்ல. எனவே, மழையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதுவழி தற்போது பிரபலமாகி வருகிறது.

 2 மில்லி மீட்டர்

சிங்கப்பூர் தேசிய பல்கலை.யைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதில் ஒரு புதிய முறையை வடிவமைத்துள்ளனர். ஆய்வாளர்கள், 32 சென்டிமீட்டர் உயரமும் 2 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட டியூப்பை எடுத்துக் கொண்டனர்.

இந்த டியூப் மின்சாரத்தைக் கடத்துகின்ற பாலிமரால் ஆனது. இதன் மீது ஓர் உலோக ஊசியைப் பொருத்தினர்.

ஊசி மீது விழும் மழைத்துளி பல சிறு துளிகளாகப் பிரிந்து குழாய்க்குள்ளே செல்லும். அப்படிச் செல்லும் போது, காற்றுடன் இணைந்து மின்சாரம் உற்பத்தியாகும்.

பாதிப்பு ஏற்படாது

இந்த மின்சாரத்தை வைத்து 12 எல்இடி விளக்குகளை 20 நொடிகளுக்கு எரிய வைக்க முடியும்.

ஆகவே, இது மிக எளிமையான வழி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற பல டியூப்களை இணைத்து வைத்து ஒரு வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

நகரப் பகுதிகளில் வீட்டு மேற்கூரைகளின் மீது மழை பொழியும்போது, இந்த முறையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். இதனால், எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *