பி.ஜே.பி.யில் குழப்பம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கட்சித் தலைவர்களை மாற்ற மேலிடம் முடிவு எம்.எல்.ஏ. பதவி விலகல்

1 Min Read

அய்தராபாத், ஜூலை 1– ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில தலைவராக புரந்தேஸ்வரியும், தெலங்கானா மாநில பாஜக தலைவராக ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டியும் பதவி வகித்து வந்தனர். இவர்களது பதவி காலம் முடிவடைந்ததால், இந்த இரு மாநிலத்திலும் கட்சியை மேலும் பலப்படுத்த புதிய தலைவர்களை பாஜக நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நேற்று ஆந்திரத்தின் புதிய பாஜக தலைவர் பதவிக்கு மேனாள் மேலவை உறுப்பினரான பி.வி.என்.மாதவ் விண்ணப்ப மனு தாக்கல் செய்தார். இவர் தற்போது ஆந்திர மாநில பாஜக பொது செயலாளராக உள்ளார். இவரது தந்தை மறைந்த சலபதி ராவ் 2 முறை மேலவை உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

தலைவர்களை மாற்ற முடிவு

இதேபோன்று தெலங்கானா மாநில புதிய பாஜக தலைவராக மேலவை உறுப்பினர் ராமசந்திர ராவை கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இவர் நேற்று (30.6.2025) மதியம் தலைவர் பதவிக்காக விண்ணப்ப மனுவை தாக்கல் செய்தார். இவர் விரைவில் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ. பதவி விலகல்

இந்நிலையில், தெலங்கானா பாஜக எம்எல்ஏவான ராஜாசிங் பாஜகவிலிருந்து விலகினார். இது குறித்துராஜாசிங் கூறுகையில், ‘‘நான் பாஜகவின் எம்எல்ஏவாக இங்கு உள்ளேன். கட்சிக்காக பாடுபட்டு வருகிறேன்.

மாநில பாஜக தலைவராக பதவி வகிக்க எனக்கு முழு தகுதியும் உள்ளது. இதற்காக நான் விண்ணப்பிக்க விரும்பினேன். ஆனால் என்னை பாஜகவினர் தடுத்து விட்டனர். ஆதலால் நான் பாஜகவிலிருந்து விலகுவதாக மாநில கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டிக்கு கடிதம் எழுதி உள்ளேன்’’ என கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *