டிசம்பர் 23இல் திருச்சியில் “வெல்லும் ஜனநாயகம்” விடுதலை சிறுத்தைகள் மாநாடு

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு

திருச்சி: நவ 12- திருச்சியில் டிச. 23ஆ-ம் தேதி விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று விசிக தலைவரும், மக்க ளவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார். 

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர் களிடம் நேற்று (11.11.2023) கூறியதா வது: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் டிச. 23-ஆம் தேதி ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஅய்எம்எல் தேசிய பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச் சாரியா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

பாஜக மாநிலத் தலைவர் அண் ணாமலையின் நடைபயணத்தில், அவரது கட்சியினர் பங்கேற்பதைக் காட்டிலும், அதிமுக, பாமக தொண்டர்களே அதிக அளவில் பங்கேற்கின்றனர். பாஜக ஆட் சிக்கு வந்தவுடன் பெரியார் சிலை அகற்றப்படும் என்று அண்ணா மலை கூறியுள்ளார். ஒருபோதும் பெரியார்சிலையை அகற்ற முடி யாது. அண்ணாமலையின் பேச்சு தமிழ்நாட்டில் எடுபடாது. 

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *