தஞ்சாவூர், மண்டலக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் – அமுதா இணையரின் மகள் ஆர்த்தி, மண்டலக்கோட்டையைச் சேர்ந்த ராமன் -சின்னமணி இணையரின் மகன் அரவிந்த் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் நடத்தி வைத்தார். நிகழ்வில் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராமலிங்கம், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, க.கலைமணி, சோ.சுரேஷ், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் த.பரிதின், தேனி முருகேசன், வைரமுத்து, விஜயகுமார், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (சென்னை, 20.6.2023)