வருந்துகிறோம்

1 Min Read

திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றும், இயக்கம் நடத்திய பல மாநாடுகளில் கலந்து கொண்டும் பெங்களுருக்கு வரும் ஆசிரியர் மற்றும் கழக முன்னணியினர், தோழர்களை வரவேற்றும் உபசரித்த கொள்கை வீராங்கனையும், கருநாடக மாநில திராவிடர் கழக மேனாள் செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி ப.பாண்டியனின் வாழ்விணையரும், ஒசூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணியின் அன்புத் தாயாரும், ஒசூர் மாவட்ட கழக தலைவர் சு.வனவேந்தனின் மாமியாருமான கோ.இளஞ்சியம் (வயது 74) திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு நேற்று திருச்சியில் (23.06.2025) இரவு மருத்துவமனையில் 10.45 மணிக்கு மறைவுற்றார்.அவரது இறுதி நிகழ்வு திருச்சி பாலக்கரை எடத்தெருவில் இருந்து எந்தவித மூடசடங்குமின்றி இன்று (24.06.2025) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது.
தோழர்கள் கண்மணி, வனவேந்தன் ஆகியோரிடம் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *