குமரி மாவட்ட பகுத்தறிவுப் பெருமகனார் ஆசிரியர் எஸ்.கே.அகமது மறைந்தாரே! நமது வீர வணக்கம்!

1 Min Read

கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும், சிறந்த நல்லாசிரியராகப் பற்பல ஆண்டுகள் தொண்டாற்றிய நமது மதிப்புக்குரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தக்கலை எஸ்.கே.அகமது அவர்கள்  (வயது 86) நேற்று (20.6.2025) அன்று காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு, மிகவும் வருத்தமும், துன்பமும் அடைகிறோம்.

குமரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக அமைப்புகளில் முக்கிய மூத்த தலைவர்களில் மிஞ்சி இருந்தவர் அவர். ஈடற்ற இழப்பு அவருடையது!

அவரது ஆழ்ந்த கொள்கைப் பிடிப்பும், தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் மற்றும் நம்மிடமும் அவர் காட்டிய கொள்கை மாறாப் பாதைப் பயணமும் நமது வணக்கத்திற்குரிய ஒன்றாகும்!

அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்ப உறவுகளுக்கும், இயக்கப் பகுத்தறிவாளர்கள், கொள்கை உறவுகளுக்கும் நமது ஆறுதலும், மறைந்த அவருக்கு நமது வீர வணக்கமும்!

வீர வணக்கம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

21.6.2025

குறிப்பு: இன்று (21.6.2025) அவரது உடல் அடக்கம் செய்யப்படும் இறுதி நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு, இறுதி மரியாதை செலுத்துவர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *