சுற்றுச் சூழலுக்கு ஏற்ற மின் வாகனங்கள் அறிமுகம்

1 Min Read

 சென்னை, ஜூன் 21- இந்தியாவின் நகர்ப்புற மின் வாகன இயக்கத்தில் புத்தாக்கமான மாற்றத்தை ஏற்படுத்து வதற்காக புதிய நகர்ப்புற பயணிகள் மின்வாகனமான ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி எனும் மூன்று சக்கர மின் வாகனத்தை ஒமேகா சீக்கி மொபிலிட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டியின் இரண்டு வகைகளை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன் அறிமுக விழாவில் பேசிய ஒமேகா சீக்கி மொபிலிட்டியின் நிறுவனர் தலைவர் உதய் நாரங்:- வாகனப் போக்குவரத்து என்பது வெறும் செயல்திறனைக் கடந்து சுற்றுச்சூழல் பொறுப்புணர்வின் அடையாளமாக மாற்றும் எதிர்காலத்தை வடிவமைப்பதே எங்கள் நோக்கம். ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டியின் அறிமுகத்துடன், நகர்ப்புற போக்குவரத்தை மறுவரையறை செய்வதற்கான எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம். இந்தியா முழு வதும் மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சவால் களுக்கு தவிர்க்கமுடியாத தீர்வை முன்வைக்கிறோம். புதுமை, நீடித்ததன்மை, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, போக்குவரத்து வாகன எல்லைகளை விரிவாக்கவும், புதிய சாத்தியங்களை திறந்து, போக்குவரத்து வாகன முறையை மாற்றவும் நாங்கள் துணிகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *