அடையாறு புற்றுநோய் மய்யம் நிறுவப்பட்ட நாள் இன்று (18.6.1954) இந்தியாவின் சென்னை மாநகரில், அடையாறில் அமைந்துள்ளது. புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை மய்யம். இம்மய்யம் 1954, சூன் 18ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ்.கே.புண்ணியகோடி (முதலியார்) வழங்கினார். 12-ஆவது அய்ந்தாண்டுத் திட்டகாலத்தில் இந்த மருத்துவமனையை தேசிய அளவில் தன்னாட்சி புற்று நோய் ஆராய்ச்சி மய்யமாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.