ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

   கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.6.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

* பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று (22.6.2023) நடந்தது. இதில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியாவின் கூட்டாட்சியை பாஜக துண்டாடுகிறது. தற்போதைய மோடி அரசில், அனைத்திலும் ஒன்றிய அரசை மய்யப்படுத்தும் போக்குகள் அதிகரித்துள்ளன என்கிறார் பேராசிரியர் கிறிஸ்டபி ஜாப்ரலெட்.

தி டெலிகிராப்:

* கிட்டத்தட்ட 20 எதிர்க்கட்சிகளின் அரசியல் ஒத்து ழைப்பான பாட்னா ‘மெகா-பேரணி’ ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் வளர்ச்சியாகும். 2014இல் உருவான பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அதிகாரத்திற்கு எதிரான ஒரு கட்டமைப்பு உருவாகி வருவதை குறிக்கிறது என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஆசிம் அலி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மக்களாட்சி, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மையை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கின்றன. இதில் கடைசி வரை உறுதியாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு சொன்னேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *