சென்னை, மே 26- பொறியியல் கல்லூரிகளில், ஆர்க்கிடெக்சர் படிப்பை கூடுதலாகச் சேர்த்து பலதுறைபடிப்பு அதன்மூலம் அளிக்கப்படுகிறது. சுயதொழில் நாட்டமுள்ள மாணவர்கள் ஆர்க்கிடெக்சர் படிப்பின் மீது ஆர்வம்கொண்டுபடித்து சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
கட்டட வடிவமைப்பு என்ற ஆர்க்கிடெக்சர் கோர்ஸில் சேரவிரும்பும் மாணவர்கள் பிளஸ்-டூ வகுப்பில் கணிதப் பாடத்தை எடுத்து படித்தி ருப்பது அவசியம். பி.ஆர்க் படிப்பில் சேர பிளஸ்-டூ தேர்வு முடிந்தவுடனோ அல்லது அதற்கு முன்னதாகவோ கவுன்சில் பார் ஆர்க்கிடெக்சர் அமைப்பு நடத்தும்தேசிய அளவிலான திறனறிவு தேர்வை எழுதுவது அவசியம். அத்துடன் கட்டடங்களையும், இதர கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய அய்ந்து ஆண்டு பி.ஆர்க் படிப் புக்கு National Aptitude Test for Architecture (NATA) என்ற நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும்.
நுழைவுத் தேர்வைப் பொறுத்தவரை National Aptitude Test for Architecture (NATA) 200 மதிப்பெண்கள்கொண்டது. இதில் 80 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணை 50 சதவிகிதமாகவும், பன்னிரண்டாம் வகுப் பில் பெறும் மதிப்பெண்ணை 50 சதவிகிதமாகவும் கணக்கில் எடுத்துக்கொண்டு கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வில் பொது அறிவு வினாக்களோடு, கட்டடக் கலையின் வரலாறு சார்ந்த விஷயங்கள் குறித்து சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் ஒருபேப்பரும், மாணவரின்படம் வரையும் திறனையும், கற்ப னைத் திறனையும் சோதித்தறியப்படும் வகையில் டிராயிங் தேர்வு இரண்டாவது பேப்பராகவும் இருக்கும். கட்டட வடிவமைப்புப் படிப்பான பிஆர்க் கோர்ஸில் நகர கட்டமைப்பு, கட்டட வடிவமைப்பு, கட்டட உள் அமைப்பு டிசைன், லேண்ட்ஸ்கேப் டிசைன், 3டி விஷுவலைஸர், புராஜெக்ட் மேனேஜ்மென்ட், என்விரான் மென்ட் டிசைன் எனப் பல பிரிவுகள் உள்ளன.
ஒன்றிய, மாநில அரசுகள் மேற் கொள்ளும்நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதி திட்டங்கள் மூலம் கட்டுமானத் துறையிலும், கட்டட வடிவமைப்பியல் துறையிலும் பணி வாய்ப்புகள் நிறைய உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களான பாதுகாப்புத் துறை, ரயில்வே துறை, வங்கித் துறைகளிலும் கட்டுமான வடிவமைப்பியல் பிரிவில் வேலை வாய்ப்பைப் பெறலாம். ஒவ்வொரு மாவட்டத் திலும் அமைந்துள்ள நகர கட்டமைப்புத் துறையிலும் வேலை வாய்ப்பு பெறலாம்.
படிப்பை முடித்தவுடன், ஆர்க்கிடெக்சர் நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வேலை செய்த பின்பு, தனியே வடிவமைப்பாளராகக் களம் இறங்கி,சுயமாக பொருளீட்டவும் வாய்ப்புகள் இப்படிப்பில் கொட்டிக் கிடக்கிறது.