அட மூடத்தனமே!

Viduthalai
1 Min Read

மழை பெய்ய சிறுவர்களுக்கு ‘டும் டும்’மாம்!

அரசியல்

மாண்டியா, ஜூன் 27 கருநாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண் டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப் படுகிறது. இந்நிலையில், கருநாட காவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக் களாக மாற்றி, திருமணத்தை நடத்தி யுள்ளனர். அதனுடன், மழை வர வேண்டும் என கிராமவாசிகள் மழைக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனராம்.

இதன் பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர். இதுபற்றி உள்ளூர் வாசிகள் செய்தியாளர் களிடம் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது, கருநாடகாவில் பருவமழை பலவீன மடைந் துள்ளது. இந்த ஆண்டில் மழை பற்றாக் குறையாக உள்ளது. இதனால், பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண் டாடுவது என மக்கள் முடிவு செய்தனர் என அவர்கள் கூறியுள் ளனர்.

மழை பொழிந்ததாகத் தகவல் இல்லை!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *