பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, மே 23– பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் வகையில் அது தொடா்பான விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு களில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி கள், பயிற்றுவித்த ஆசிரி யா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த ஏப்.25-இல் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை யில், படைப்பாற்றல், புத்தாக்க முயற்சி, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவா் களின் கற்றல் திறனை அதிகப்படுத்தி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கும், 100 சதவீத தோ்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளிக் கப்படுகிறது என உத்தர விட்டுள்ளாா்.

இதையடுத்து அர சாணை நகலை அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்து, அப்பள்ளிகளி லிருந்து பெறப்படும் விவரங்களைத் தொகுத்து தாமதம் ஏற்படாமல் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *