குற்றாலத்தில் நடைபெறவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாமில் குமரிமாவட்டத்தில் இருந்து அதிக மாணவர்களை பங்கேற்க வைக்க குமரிமாவட்ட திராவிடர்கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். பயிற்சி முகாமிற்கு குமரிமாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் ரூ.1000 நன்கொடையினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார். உடன் குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் உ.சிவதாணு, செயலாளர் பெரியார் தாஸ், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், தோழர்கள் கவிஞர் ஹ.செய்க்முகமது, ச.ச. மணி மேகலை உள்ளனர்.